எஸ்.எம்.எஸ்., அனுப்பினால் வீடு தேடி வரும் மரக்கன்றுகள்


சென்னை : எல்லாரையும் முன்னேற்ற, சென்னை செயல்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது, சென்னை முன்னேற வேண்டும் என்பதற்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, "சென்னை சமுதாய சேவை' (சென்னை சோஷியல் சர்வீஸ்) அமைப்பு.

வயதானோர்களுக்கும் குழந்தைகளுக்கும் உதவிபுரியும், "அரவணைப்பு', படிக்க வசதி இல்லாமல் திண்டாடும் மாணவர்களுக்கு உதவி புரியும், "நாளந்தா', சென்னையில் மரங்களை அதிகப்படுத்த செயல்படும், "சுற்றுச்சூழல் பாதுகாப்பு', அவசரக் காலத்தில் ரத்தம் வேண்டுபவர்களுக்கு தானம் செய்யும், "சிவப்புத்துளி,' சென்னைக்கு அருகில் உள்ள கிராமப்புற மக்களின் வாழ்க்கையை முன்னேற்றும், "கிராமோதரன்' என சென்னை சமுதாய சேவை அமைப்பில் பல குழுக்கள் உள்ளன.

பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் சென்னைவாசிகள், 2,000 பேர், இதில் உறுப்பினர்களாக உள்ளனர். சென்னையை "பசுமை நகரமாக்க' வேண்டும் என்பது தான் இந்த அமைப்பின் முதன்மை விருப்பம். இதற்காகவே, சுற்றுச் சூழல் பாதுகாப்புக்குழு என்ற பிரிவை ஏற்படுத்தியுள்ளனர்.

குழந்தை பெயரில் மரக்கன்று: சென்னையில் எந்தப் பகுதியில் இருந்தாலும், GREEN என, டைப் செய்து, பெயர், வீட்டு முகவரி போன்றவற்றை, 98940 62532 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் போதும். மரக்கன்று இரண்டு வாரத்திற்குள் எஸ்.எம்.எஸ் அனுப்பியவரின் வீடு தேடி வரும்.அவர்களின் வீடு, அதன் சூழல், போன்றவற்றை ஆராய்ந்து, மரக்கன்றை நட்டு, பின்னர் பராமரிக்கும் முறை பற்றி விளக்குவார்கள், அந்த மரத்திற்கு அவர்களுக்கு விருப்பமான குழந்தையின் பெயரை சூட்டுவார்கள்,

""குழந்தைகளின் பெயர்களை மரங்கன்றுகளுக்கு சூட்டுவதன் மூலமாக, அந்த மரக்கன்றை தங்கள் குழந்தையைப் போலவே பராமரிப்பார்கள்'' என்கிறார்கள் சென்னை சமுதாய சேவை அமைப்பின் நிர்வாகிகள். அது மட்டுமின்றி, இந்த அமைப்பின் உறுப்பினர்களின் திருமண விழாக்களில், தாம்பூலப்பைகளுக்கு பதிலாக, மரக்கன்றுகளை வழங்கி, இயற்கை குறித்த விழிப்புணர்வு செய்கிறது.

சென்னையில் உள்ள பல்வேறு பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று, சுற்றுச்சூழல், போக்குவரத்து போன்றவை பற்றிய விழிப்புணர்வு முகாம்கள் நடத்துகிறார்கள். மேலும், சென்னையை சுற்றி உள்ள கிராமப்புற பகுதிகளுக்குச் சென்று, மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்குத் தேவையான விழிப்புணர்வு முகாம்களையும் இந்த அமைப்பினர் நடத்தி வருகின்றனர்.

""நம்மை வாழ வைக்கிற சென்னைக்கு, நாம் என்ன செய்கிறோம் என்பது தான் முக்கியம். இந்த உணர்வு எல்லோருக்குள்ளும் வந்து விட்டால், சென்னை முன்னேறி விடும். வாங்கியதை கொடுப்பது தானே நம் மரபு'' என்கிறார் சென்னை சமுதாய அமைப்பின் தலைவர் சதிஷ்குமார்.

இந்த அமைப்பில் இணைந்து பணியாற்றவும், சேவையை பயன்படுத்த விரும்புவோரும் மேலும், விவரங்களை அறிய, 98400 19007 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஒரு மணி நேரத்தில் ரத்தம் கிடைக்கும் : அவசர உதவிக்காக ரத்தம் தேவைப்படுபவர்கள், இந்த அமைப்பினருக்கு போன் செய்தால், சென்னையில் எங்கிருந்தாலும், எந்தவகை ரத்தமாக இருந்தாலும், அந்த இடத்திற்கு தேவையான அளவு ரத்தம், ஒருமணி நேரத்தில் இலவசமாக வழங்கப்படும்.

"நாளந்தா' கல்விக்குழுவின் மூலமாக வசதியற்ற ஏழைக்குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள். அந்த உதவித்தொகையின் மூலமாக படித்து, வேலைக்குச் சேர்ந்தவர்கள் பின்னர், அதே அமைப்பில் படிக்க வசதி இல்லாத, மாணவரை படிக்க வைக்க வேண்டும் என்பது பொது விதி.

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, வாரம் ஒரு முறை உதவி செய்கிறார்கள். பாடம் படித்துக்காட்டுவது, பாடங்களை டேப் செய்து கொடுப்பது போன்ற வேலைகளுடன் தேர்வின் பொழுது "ஸ்கிரைப்'ஆக செயல்படுகிறார்கள்.

பொதுமக்கள் தங்களது வீட்டு விசேஷங்களில், வீணாகும் உணவுப் பொருட்களை இவர்களுக்குத் தெரியப்படுத்தினால், சம்பவ இடத்திற்கே வந்து, அந்தப் பொருட்களை வாங்கி, சென்னையில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அளிக்கின்றனர். இதே போல் உடைகளையும் வாங்கி, உடை வாங்குவதற்கு வசதியில்லாதவர்களுக்கு கொடுத்து வருகின்றனர்.


நன்றி : தினமலர்.com

Chennai City Guide

Chennai is the Capital of Tamil Nadu and the fourth Largest metropolitan city of India. The Chennai Metro falls in three Districts of the Tamil Nadu State viz. Chennai District, part of Thiruvallur District, and part of Kancheepuram District. The extent of the Chennai District (covered in Chennai Municipal Corporation area) is176 sq.km and comprises 55 revenue villages in five Taluks [viz. (i) Fort-Tondiarpet Taluk, (ii) Perambur-Purasawalkam Taluk, (iii) Egmore-Nungambakkam Taluk, (iv) Mambalam-Guindy Taluk and (v) Mylapore-Triplicane Taluk]. In Thiruvallur District out of total district area of 3427 sq.km, 637 sq.km. in Ambattur, Thiruvallur, Ponneri and Poonamallee taluks fall in CMA. In Kancheepuram Districtout of 4433 sq.km, 376 sq.km in Tambaram, Sriperumbudur and Chengalpattu Taluks fall in the Metropolitan area. Mainly the Chennai in live men manner is classified in to 3 Parts. The North, South & Central Chennai.

Chennai is at the North Most Location of Tamil Nadu further North Most of that part is North Chennai........................


Some Useful Links:


Joy of Giving Week - Battle of Buffets

As a part of Joy of Giving Week (27 Sep to 3 Oct) today Battle of Buffets are organised at Chennai Trade Center. The Entry charge for This shall be Rs. 5000. This in view of Helping NGOs.

Green Corridor to be setuped in Chennai

Chennai Traffic Police Planned to set up Green Corridor.
This doesn't Deals with Greeny Plants & Trees. Green corridor Plan is to set up clear path Between Hospitals ie, to make all the Traffic Signals Gerrn Between two hospitals in the View of Faster Transpotation at Emergency Situations like Organ Transparentation. Even CCTP also offers Patrol wnen such incident occurs.

Hats off=>

09.09.09 இரவு 9 மணிக்கு 9 நிமிடம் விளக்குகள் அணைப்பு : புவி வெப்பமயமாதலை தடுக்க விழிப்புணர்வு

சென்னை : ""புவி வெப்பமயமாதலைத் தடுக்கும் வகையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, நாளை இரவு (09.09.09) 9 மணிக்கு 9 நிமிடம் விளக்குகள் அணைக்கப்படும்,'' என்று மேயர் சுப்ரமணியன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:புவி வெப்பமயமாதலைத் தடுக்கும் வகையில், பொதுமக்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்த, நாளை இரவு 9 மணிக்கு சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம் செயல்படும் ரிப்பன் கட்டடத்தில் இருந்து, என் தலைமையில் நகரில் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்படும். 9 நிமிடங்கள் கழித்து, மறுபடியும் விளக்குகள் ஒளியூட்டப்படும்.இந்த நிகழ்ச்சியில் 99999 என் பதைக் குறிக்கும் வகையில் நகரில் பல்வேறு துறைகளைச் சார்ந்த 99 வல்லுனர்கள் கலந்துகொண்டு, புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவ டிக்கைகள் குறித்து உரையாற்றுவர்.ஒரு நாள் 9 நிமிடங்கள் விளக்குகளை அணைத்து வைப்பதால், பூமி குளிர்ந்துவிடப்போவதில்லை. புவி வெப்பமயமாதல் குறித்த செய்தி, மக்களுக்குச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் விளக்குகள் அணைக்கப்படும்.

அந்த சமயத்தில், சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான அனைத்து கட்டடங்களிலும் விளக்குகள் அணைக்கப்படும். அதற்கான சுற்றறிக்கை, கமிஷனர் மூலம் அனுப்பப்படும். நகரில் உள்ள சாலை ஓர பூங்காக்கள். சாலை திட்டு பூங்காக்கள், மற்றும் பூங்காக்களில் விளக்குகள் அணைக்கப்படும்இதற்காக பல துறைகளைச் சார்ந்தவர்கள், அவர்களது துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் அவர் களது குடும்பத்தினர் இரவு 9 மணிக்கு விளக்குகளை அணைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வங்கி ஊழியர்கள் சங்கத் தலைவர் வெங்கடாசலம் மற்றும் வேலம்மாள் கல்வி நிறுவனத்தின் நிர்வாகி வேல்முருகன் ஆகியோர் அவர்களது சார்பு குடும்பத் தினர் உட்பட பல்வேறு சமூக அமைப் பினர் இரவு 9 மணிக்கு விளக்குகளை அணைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.இவ்வாறு மேயர் கூறினார்.

தகவல் உரிமை சட்ட பயன்பாடு: முதலிடத்தில் தமிழர்கள்

"தேசிய அளவில் தகவல் உரிமை சட்டத்தை பயன்படுத்துவதில், தமிழர்கள் முதலிடத்தில் உள்ளனர்' என, மாநில தகவல் கமிஷனர் பெருமாள்சாமி தெரிவித்தார்.

கடந்த 2006 ஜனவரி முதல், நடப்பாண்டு ஆகஸ்ட் வரை, தமிழகத்தில் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 600 மனுக்கள், தகவல் உரிமை சட்டத்தில் பெறப்பட்டுள்ளன. இதில், 22 ஆயிரத்து 500 மனுக்கள் தகுதியற்றவையாக நிராகரிக்கப்பட்டுள்ளன. இவை, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வராதவை; 86 ஆயிரத்து 300 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க, அந்தந்த துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வெளிப்படையான அரசு நிர்வாகம், ஊழல் ஒழிப்பு, அதிகாரிகள் பொறுப்புடன் நடந்து கொள்வதை உறுதி செய்தல் ஆகியவற்றுக்கு இச்சட்டம் உத்தரவாதம் தருகிறது. அரசு ரகசியங்கள் தொடர்பான சில துறைகளுக்கு, இச்சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட நபரின் உயிர், உடல், உடைமைகளுக்கு தீங்கு விளைவிக்கும் விளக்கங்கள், வியாபார ரீதியான ரகசியங்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகம், தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்துவதில் முதலிடத்தில் உள்ளது.

இதற்கு, தமிழர்களிடையே இச்சட்டம் தொடர்பாக உள்ள விழிப்புணர்வே காரணம். தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தேவையான தகவல் பெற, வெள்ளை பேப்பர் போதும். அதில், அத்துறையின் பொது தகவல் அதிகாரியின் முகவரியிட்டு, 10 ரூபாய் கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி, அனுப்பினால் போதுமானது. கருவூலத்தில் செலுத்தப்பட்ட சலான், டிமாண்ட் டிராப்ட் ஆகியவற்றையும் கொடுக்கலாம். மேல்முறையீடு செய்ய, ஏற்கனவே செய்த மனுவின் ஜெராக்ஸ் இணைத்து விண்ணப்பிக்கலாம். இவ்வாறு பெருமாள்சாமி தெரிவித்தார்.

National Awards own By Tamil Movies

The Tamil Movie "காஞ்சிபுரம்" (Kancheepuram) Won National Award of Indian Films.
Best Actor Award was given to Actor Prakash Raj for the Same Movie.
Best Animation Film Award owned by Movie "இனிமேல் நாங்கதான்" (Enimel nangadhan)
Special Sound Effect Awards was given to Movie Shivaji
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates